கரோனா காலத்தில் நோய் எதிர்ப்புசக்தியை கூட்டிக் கொள்வது மிகவும் அவசியமானதாக இருக்கிறது. அதற்கு பாரம்பர்ய முறையில் ஒரு வழி இருக்கிறது. அதாவது முளைகட்டிய நவதானியங்களில் நார்ச்சத்து, புரதம் போன்றவை அதிகமாக உள்ளது. அதனை சூப்பாக போட்டுக் குடித்தால் அருமருந்தாக இருக்கும்.
முளைகட்டிய நவதானியங்களை வைத்து எப்படி சூப் செய்வது என பார்க்கலாம். முளைகட்டிய பயறுகள் – 1 கப், வெங்காயம் – 1, பூண்டு – 2 பல், சீரகம் – 1 டீஸ்பூன், தனியா -1 டேபிள்ஸ்பூன்,
மிளகு – காரத்துக்கேற்ப, கொத்தமல்லி தழை – தேவைகளுக்கு ஏற்ப, எலுமிச்சைச் சாறு – 1 டேபிள்ஸ்பூன், தேங்காய்ப் பால் – 1 கப், புளிக்காத கெட்டி தயிர் – அரை கப், உப்பு – தேவைப்படும் அளவு
எப்படி செய்ய வேண்டும்
முதலில் முளைகட்டிய பயறுகளை வேகவைக்க வேண்டும். மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை, வேக வைத்த பயறு கொஞ்சம் எடுத்து போட்டு அனைத்தையும் மிக்ஸ் செய்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வானொலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் நன்கு அறைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள் அதன்பின் அதனுடன் மீதமுள்ள வேகவைத்த பயறை சேர்த்து மேலும் சிறிது நேரம்வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
பிறகு உங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
அடுப்பை சிறு தீயில் வைத்து, தேங்காய்ப் பாலை சேருங்கள் கொதித்து வரும்போது உடனே அடுப்பை அணைத்துவிடவும். தொடர்ந்து எலுமிச்சை சாறு, நன்கு அடித்த கெட்டித் தயிரை சேர்த்து கப்பில் ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி இதழ்களை பர பர பரவென அப்படியே மேலாக தூவி விடுங்கள். சூப்பரான சுவையான முளைகட்டிய நவதானிய சூப் ரெடி. இதை அவ்வப்போது குடித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுங்கள்.