‘நமக்குன்னு யாரு இருக்கா சாமி?’ என ஏங்கும் ஏழை மக்களின் புலம்பல்கள் நீண்டுகொண்டே இருக்கிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க சினிமாவில் கதாநாயகன் வருவதைப் போல யாரும் வரமாட்டார்களா? என ஏக்கத்தோடு படுக்கைக்கு செல்லும் மனிதர்கள் இங்கு ஏராளம். சமூக அநீதிகளுக்கு எதிராக மக்களின் பக்கம் நின்று பேச, உங்கள் குரலே நம் குரலாக, தமிழ் சமூகத்தின் குரலாக, தேசத்தின் குரலாக விரைவில் மலர்கிறது அகம் தமிழ்!
இப்போதைய சூழலில் ஏன் ஒரு ஊடகவெளி அவசியம் என்கிறீர்களா? ஏற்கனவே தொலைக்காட்சிப்பெட்டியை ஆன் செய்தால் செய்திச் சேனல்கள் வரிசைகட்டுகிறது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் செய்திச் சேனல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்சிகளும் எப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறதோ அதேபோல் சேனல்களும் எடுக்கின்றன. உண்மையில் நாம் இப்போது படித்துக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருப்பதெல்லாம் நடுநிலை செய்திகள் தானா என்னும் கேள்வியும் துளைத்து எடுக்கிறது. இப்படியான சூழலில் தான் செய்தியை செய்தியாகவே எவ்வித விருப்பும், வெறுப்பும் இல்லாமல் உங்களிடம் சேர்க்க வருகிறது அகம் தமிழ்!
அரசியல், இலக்கியம், சினிமா, விவசாயம், விஞ்ஞானம், இளைஞர் நலன், மகளிர் நலன், மருத்துவம் என பயனுள்ள செய்திகள் முதல், வைரல் விசயங்கள் வரை இனி உங்கள் விரல் நுனியில்…அகம் தமிழின் ஊடே!
இரண்டரை மணிநேரம் ஓடும் திரைப்படத்தில் கூட முழுக்க கருத்தாக இருந்தால் ‘தியேட்டரில் உட்கார வைச்சு கிளாஸ் எடுத்துட்டாங்க..’’என ரசிக மனநிலையில் புலம்புவதை கவனித்துள்ளோம். அதனால் கருத்துக்களை மட்டுமே வரிசை கட்டாமல் இன்றைய யூத்களைக் கவரும் செய்திகளோடும் களத்துக்கு வருகிறது அகம் தமிழ்!
14ம் தேதி முதல் உங்களைத் தேடிவரும் இந்த பெரும்முயற்சிக்கு தோள் கொடுங்கள். எமது அகம் தமிழ்…இனி தமிழகத்தின் முகமாக மலரும்!