சிறுதானியங்கள் நம்முடைய ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடிய உணவு வகைகளில் ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் மினரல்களும் நார்ச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. ஆனால் நிறைய பேருக்கு யார் சிறுதானியங்களை சாப்பிடலாம், யார் சாப்பிட கூடாது என்ற சந்தேகங்கள் வரும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா என்கிற கேள்வி வரும். கர்ப்ப காலத்தில் பெண்கள் சிறுதானியத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று இங்கே தெரிந்து கொள்வோம்.
சிறுதானியங்களில் இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்துக்கள், ஆக்சிஜனேற்றங்கள், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.இதிலுஉள்ள அதிக இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்துகிறது. இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும் கர்ப்பகால நீரிழிவைத் தடுத்து ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்கிறது.இவற்றிலுள்ள கால்சியம் மற்றும் ஃபோலேட் கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
கருத்தரிக்க முயற்சிப்பவர்கள் சிறுதானியங்களை தங்களுடைய தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
பெண்கள் பொதுவாக தங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அக்கறையோடு இருக்க வேண்டியது அவசியம். அதிலும் கர்ப்ப காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உடலின் எல்லா உறுப்புகளும் சீராக செயல்படுவதற்கான ஊட்டச்சத்துக்களைக் கொடுக்க வேண்டும்.சிறுதானியங்களில் நியாசின் மற்றும் ஃபோலேட், பாந்தோதெனிக் அமிலம் சத்துக்கள், வைட்டமின் பி ஆகியவை அதிகமாக இருக்கின்றன.இந்த ஊட்டச்சத்துக்கள் யாவும் நம்முடைய உடலில் பல நொதிகளோடு சேர்ந்து வினையாற்றி உடல் உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் இயல்பாகவே பெண்களின் எடை அதிகரிக்கும். அதேபுால குழந்தை பிறந்த பின்னும் தொப்பை உண்டாவது, உடல் எடை அதிகரிப்பது ஆகியவை உண்டாகும்.சிறுதானியங்களில் எளிமையாக உடைக்கக்கூடிய கார்போ ஹைட்ரேட்டுகள் குறைவாகவும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மிகுதியாக இருக்கும். அதனால் இந்த கார்போஹைட்ரேட்டில் உள்ள குளுக்கோஸ் நம்முடைய ரத்தத்தில் மிக மெதுவாகக் கலக்கும்.மிகக் குறைந்த கிளைசெமிக் கொண்ட இந்த சிறுதானியங்களை எடுத்துக் கொள்ளும்போது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வோடு இருக்கச் செய்யும். அதனால் உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும். குறிப்பாக ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள்ளேயே வைத்திருக்கும்.
சிறு தானியங்களில் அதிக அளவில் ஆன்டி – ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பீனைல்கள் இருக்கின்றன. குறிப்பாக சிறுதானியங்களில் ஃபெருலீக் அமிலம் மற்றும் கேட்டசின்கள் ஆகியவை அதிகமாக இருக்கின்றன.இவற்றிலுள்ள ஆன்டி – ஆக்ஸிடண்ட்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கச் செய்து நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.