பருவ காலங்களுக்கு ஏற்றபடி நம்முடைய உடலில் ஏற்படும் மாற்றங்களைப் போலவே சருமத்திலும் நிறைய மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக கோடை காலத்தில் இன்னும் அதிக அளவில் சருமப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் சருமப் பராமரிப்பில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்யப்படும் கோடை கால சருமப் பராமரிப்புக்கு இந்த க்ரீன் டீ மிகுந்த உதவியாக இருக்கும்.
க்ரீன் டீ எக்ஸ்டாட் இருக்கிற சருமப் பராமரிப்பு பொருள்கள் நிறைய கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் அவை விலையுயர்ந்ததாக இருக்கும். அதிக விலை கொடுத்து அந்த பொருள்களை வாங்குவதைவிட வீட்டிலுள்ள க்ரீன் டீயை நேரடியாக சருமத்துக்குப் பயன்படுத்துவதன் மூலம் கூடுதலான பலன்களைப் பெற முடியும்.க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் புறஊதா கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவி செய்யும். புறஊதா கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் சருமப் பிரச்சினைகள் மற்றும் சருமப் புற்றுநோய், ஆக்சிஜனேற்ற அழுத்தம் போன்றவற்றை சரிசெய்ய க்ரீன் டீயில் உள்ள பாலிபிளைல்கள் உதவும்.
இதனால் புறஊதா கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகிற சருமப் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்க உதவி செய்யும்.கிரீன் டீயில் காணப்படும் நான்கு வகையான கேட்டசின்களில் ஒன்றான EGCG சருமத்தில் ஏற்படும் தொற்றக்களைச் சரிசெய்யும் பண்புகளைக் கொண்டது. குறிப்பாக ரோசாசியா மற்றும் முகப்பரு போன்ற அழற்சி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சரிசெய்யும்.ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு சருமத்தில் அதிகப்படியாக சீபம் சுரக்கும். இந்த சீபம் சுரப்பினால் சருமத்தில் அதிகப்படியான பருக்கள் மற்றும் போன்றவை உண்டாகும்.இந்த அதிகப்படியான சீபம் சுரப்பின் காரணமாக உண்டாகும் முகப்பருக்களைப் போக்க க்ரீன் டீ உதவி செய்யும்.