இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்கிற திரைப்படம் உருவாகி வருகின்றது இதனைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் அடுத்ததாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.அந்த படத்தில் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாகவும். அந்தப் படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாரி செல்வராஜ் முதல்படமான “பரியேறும் பெருமாள்” பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது .அந்த படத்தை பா ரஞ்சித் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் இணையும் படத்தின் கதை விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது “கர்ணன்” படத்தின் பணிகள் முழுமையாக முடிந்தவுடன் இந்த படத்தில் அவருடைய முழுக் கவனத்தையும் செலுத்துவார் என்று தெரிய வருகிறது. இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் கண்டிப்பாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாரி செல்வராஜ் இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் கர்ணன் திரைப்படம் மார்ச் மாதத்தில் திரைக்கு வருகிறது.