திண்டுக்கல் அருகே உள்ள சங்கிலித்தேவன் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் வினோத்குமார். இவருடைய வயது 25. இவர் வேலை பார்க்காமல் ஊர் சுற்றி வந்துள்ளார் பெற்றோர் அவரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கான வினோத்குமார் திருப்பூரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். மகனை அங்கிருந்து அனுப்பி வைக்குமாறு உறவினர்களிடம் பெற்றோர்கள் வற்புறுத்தி உள்ளனர். அவர்கள் வினோத்குமாரை சொந்த ஊருக்கு அனுப்பி உள்ளனர். இங்கு வந்த வினோத் குமார் கிராமத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டா.ர் திண்டுக்கல் தெற்கு போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்