அக்ரோடெக் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் பெண்கள் அணியின் சார்பில் இன்று, உலக மகளிர் தினவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மகளிர்களுக்கு அவர்களது உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஊட்டப்பட்டது. கூடவே பரிசுப்பொருள்களும் வழங்கப்பட்டது.
அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனமானது கிராமப்புற மகளிரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவருகிறது. கிராமப்புற மகளிரை பொருளாதாரரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தில் குழுவாக அவர்களை ஒருங்கிணைத்து ஆடு வளர்க்கும் திட்டத்தை இந்நிறுவனம் செயல்படுத்திவருகிறது.
விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், பாண்டிச்சேரி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, திண்டிவனம், கடலூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஆடுவளர்ப்புத் திட்டத்தை இந்நிறுவனம் செயல்படுத்திவருகி றது. இந்திய அளவில் செயல்படும் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் விவசாயிகளுக்கு ஆடுகளை விலையில்லாமல் வினியோகித்து அவர்கள் ஆடுவளர்ப்பதற்குத் தேவையான உதவிகளையும், வழிகாட்டுதலையும் வழங்கும் ஒரே நிறுவனம் இதுதான். விலையில்லா ஆடுகளை அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் மூலம் பெற்ற பல கிராமப்புற பெண்கள் இன்று பொருளாதாரரீதியாக நல்ல நிலையை எட்டியிருக்கின்றனர்.
விலையில்லாமல் வினியோகம் செய்யப்படும் ஆடுகளின் தொடர் பராமரிப்புக்கும் இந்நிறுவனம் இலவசமாகவே வழிகாட்டுகிறது. இதேபோல் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை வாங்கவும், விற்கவும் சந்தைக்கு மாற்றாக ‘ஆடு வங்கித் திட்டம்’ என்னும் திட்டத்தையும் இந்த நிறுவனம் செயல்படுத்திவருகிறது. இதன்மூலம் ஏழை விவசாயிகளுக்கு ஆட்டின் எடைக்கு ஏற்ற நியாயமான விலை கிடைக்கிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் செயல்படுத்தப்படும் இந்த நடைமுறையால் விவசாயிகளுக்கு உரியவிலை கிடைப்பதோடு, வியாபாரிகளுக்கும் நேரடியாக தரமான ஆட்டை வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய அரசு கிராமப்புற மகளிரை பொருளாதாரரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தியா முழுவதும் பத்தாயிரம் விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது. மத்திய அரசின் அந்த கனவுத்திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் தமிழகத்தில் முன்வரிசையில் இருக்கும் இந்த நிறுவனம் ஆடு வளர்ப்போடு மட்டுமல்லாது, மகளிரின் மேம்பாட்டிற்காக சிறப்பான பலதிட்டங்களை செயல்படுத்திவருகிறது.
கிராமப்புற மகளிரின் மேம்பாட்டுக்கு பெரிதும் கைகொடுக்கும் அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனமானது, மகளிர் தினத்தையும் இன்று உற்சாகமாகக் கொண்டாடியது. மகளிர் தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்டத்தின் அரசூரில் மகளிர் தின சிறப்பு விழிப்புணர்வு பேரணியையும் நடத்தியது. மேலும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும், மகளிர்களுக்கு டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பரிசுப்பொருள்களை வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடியது. இந்த விழிப்புணர்வு பேரணியில் மகளிர் தினத்தின் முக்கியத்துவம், மகளிர்களுக்கு இருக்கும் உரிமைகள் ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது.
கிராமப்புற மகளிர் மேம்பாட்டில் அதிக அக்கறை செலுத்தும் அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனமானது, மகளிர் மேம்பாட்டுக்காக மிகச்சிறப்பாக மகளிர்தினத்தை கொண்டாடியது அந்தபகுதி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.