சொத்து குவிப்பு வழக்கில் சிதை தண்டனை பெற்றுவந்த சசிகலா கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சசிகலா இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சசிகலா அ.தி.மு.க கொடி கட்டிய காரில் புறப்பட்டுச் சென்றார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க கொடியை பயன்படுத்தும் உரிமை சசிகலாவுக்கு கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், “அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலா சென்ற காரில் அதிமுக கொடி இருந்தது. அதிமுகவின் பொதுச் செயலாளர் எனதால் கட்சியின் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஜனநாயக முறைப்படி அதிமுகவை மீட்டெடுக்கும் பணிகள் தொடரும். அதிமுக தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு உரிமை இருக்கிறது. சசிகலா தமிழகம் வந்தபிறகு அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்டப் போராட்டம் தொடர்ந்து நடக்கும். ஜனநாயக முறையில் அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுக என்ற கட்சி தொடங்கப்பட்டது” என்றார்.