தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கபோவதாக சொல்லப்படுகிறது.
மேலும் இப்படத்தை R B Choudary -யின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.தற்போது இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அதற்கு காரணம் கோபிசந்த் மலினேனி தெலுங்கு பிரபலம் பாலகிருஷ்ணாவை வைத்து வீர சிம்ஹா ரெட்டி படத்தை இயக்கி இருந்தார். இப்படம் ஓவர் மசாலா படமாக இருந்ததாக பல விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.