தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். அதில் கன்னியாகுமரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான மறைந்த ஹெச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கே.வீ.தங்கபாலுவின் மகன் கார்த்திக், திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் ஆகியோரும் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில பொருளாளராக ரூபி மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத்தலைவர்களாக கோபண்ணா உள்பட 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

19 பேர் கொண்ட மாநில ஒருங்கிணைப்பு குழுவில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.அழகிரி, ராமசாமி, சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், மோகன் குமாரமங்கலம், கார்த்திக் சிதம்பரம், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார், பீட்டர் அல்போன்ஸ், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், சசிகாந்த் செந்தில், ஜே.எம்.ஹாரூண் ரசீத், ஜோதிமணி உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.