கவிப்பேரரசு வைரமுத்து உலகளாவிய சமூக வலை வலைதளமான டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருந்து வருபவர். வைரமுத்து சமீபத்தில் தமது ட்விட்டர் பக்கத்தில் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி பதிவிட்டுளள்ளார்
. அவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது “போதும்! 29ஆண்டுகள் சிறைவாசம் போதும். எழுவர் விடுதலையைத்தான் மனிதாபிமானம் எதிர்பார்க்கிறது. ஆளுநரின் அதிகாரம் அறத்தை முன்னிறுத்திச் சட்டத்தை அணுகட்டும்” என தனது ஆழ்ந்த கருத்தை அவரது பாணியில் வைரமுத்து பதிவிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க 1 வாரம் அவகாசம் அளித்திருப்பது குறிப்பிட தக்கது.