தமிழ் திரைப்பட பாடலாசிரியும், கவிஞருமான வைரமுத்து சென்னை ஆயிரம் விலக்கு பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் திடீரென உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைரமுத்து தனது தேர்ந்த கவிதைகளினாலும், நல்ல திரைப்பட பாடல்களுக்காகவும் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர். அவர் இதயநோய் காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவி வந்தநிலையில் அவர் தனது வழக்கமான உடல் பரிசோதனைக்குத்தான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.