திமுக ,காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ,மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கொள்கைகளில் வேறுபட்டிருந்தாலும் தேர்தல் அரசியலில் காரணமாக ஒரே கூட்டணியில் இருந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவரான கே எஸ் அழகிரி சில விசயங்களை ரொம்பவே ஒப்பனாக சொல்லியிருக்கிறார்.
அதில், திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றது. அதேபோல் விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காங்கிரசுடன் எப்பொழுதும் சரிப்பட்டு வரமாட்டார். எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாக இருந்தாலும் மதச்சார்பின்மை என்ற ஒரே கொள்கைதான் எங்களை இதுவரை ஒற்றுமையாக வழி நடத்தி வருகின்றது என்று அழகிரி கூறியுள்ளார். வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள் மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கும் என்றாலும் மதச்சார்பின்மை என்ற ஒற்றை கொள்கையின் அடிப்படையில்தான் ஒரு கூட்டணியாக இந்த அணி போட்டியிட உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்