திருச்சி மாவட்டம் போசம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி நன்னி போசன் (45 ). இவருக்கு மனைவியும் திருமணமான மகளும், மகனும் உள்ளனர். இவர் போசம்பட்டியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையில் கொடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நன்னி போசனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் குழித்தலை பகுதியில் பதுங்கியிருந்த நன்னி போசன், போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என உணர்ந்துள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள வயல் வெளிக்குச் சென்று விஷம் குடித்து தற்கஒலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.