ஆதரவற்ற ஏழை மூதாட்டியை நேரில் அழைத்து தமிழிசை செளந்தரராஜன் உதவிய சம்பவம் தெலங்கானா மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஜன்கோன் மாவட்டம், லஷ்மி நாராயணபுரத்தைச் சேர்ந்த 75 வயதான ஆதரவற்ற ஏழை மூதாட்டி பண்டிபெல்லி ராஜம்மா.
பண்டிபெல்லி ராஜம்மாவின் பேத்தி பாம்பு கடித்து இறந்துவிட, மருமகளும் நோய்வாய்பட்டு இறந்துவிட்டதால் மூதாட்டி ராஜம்மா ஆதரவற்ற நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார் என்ற செய்தி தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கவனத்துக்கு சென்றது. உடனே தனிமையில் தவித்த அந்த பெண்ணை தெலுங்கானா ராஜ்பவனுக்கு நேரில் அழைத்து அவருக்கு ரூபாய் 50000 /- மற்றும்
3 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருள்களை வழங்கினார் தமிழிசை சவுந்தர்ராஜன்.
உதவிகளை பெற்றுகொண்ட அந்த மூதாட்டி தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை கண்ணீரோடு தெரிவித்துக்கொண்டார்.
மேலும் மூதாட்டிக்கு வீடு கட்ட உதவிய காவல்துறை உதவி ஆய்வாளர் காந்த்ராதி சதிஷ்யையும் தெலுங்கானா ராஜ்பவனுக்கு நேரில் அழைத்து அவருக்கு பாராட்டு கடிதத்தையும்,அவர் உதவிய பணத்தையும் தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவரிடம் திரும்ப கொடுத்து ஊக்குவித்து இருக்கிறார். மேலும் இது போன்ற உதவிகள் அளிப்பதன் மூலம் மற்றவர்களும் தானாக முன்வந்து ஆதரவற்ற ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளைச் செய்ய முன்வருவார்கள் என்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் காவல்துறை உதவி ஆய்வாளர் சதிஷ்யை மனதார பாராட்டினார்.
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்த இந்த செயல் தெலங்கானாவில் வைரல் ஆகி வருகிறது.