மத்திய அரசு புதிதாக கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியான மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனிடையே டெல்லிவாசிகள் சாலையில் போராட்டம் செய்வதால் கடும் சிரமம் அடைவதாக பொதுநலவழக்கு தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் மத்திய அரசு, போராட்டம் நடத்தும் விவசாயிகள், தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் ஆகியோரைக் கொண்டு ஒரு குழு அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் கோபண்ணா, ராமசுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள்,வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவது இல்லை. வேளாண் சட்டத்துக்குஎதிராக விவசாயிகள் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை என புரிந்துகொள்கிறோம். இருப்பினும் போராடும் முறையை மாற்றி பிறகுடிமக்களின் உரிமையைக் காக்க நினைக்கிறோம்.
போராட்டங்கள் அங்கீகரிக்கப்படும்போது அதனால் யாருக்கும் பாதிப்பு இருக்கக் கூடாது. வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க முடியுமா என அரசு ஆராய வேண்டும். நீதிமன்றம் முடிவெடுக்கும்வரை வேளாண் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என மத்திய அரசு சொல்லுமா?’’எனவும் நீதிபதிகள் கேல்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.