தமிழ் சினிமாவின் பிரபல பாடகரான யேசுதாஸின் மகன் தான் விஜய் யேசுதாஸ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து நிறைய மொழிகளில் பாடல்கள் பாடி வருகிறார்.
இடையில் சினிமாவில் நடிக்கவும் தொடங்கி இருந்தார். இந்த நேரத்தில் தான் விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷணா பாலா அபிராமிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்த தங்க நகைகளை பார்த்ததாகவும் அதன்பின்னர் பிப்ரவரி மாதம் வீட்டில் நகைகளை பார்த்தபோது காணவில்லை எனவும் வீட்டில் வேலை செய்யும் மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார்.
தற்போது போலீசார் அவரது வீட்டின் அருகில் உள்ள CCTC அவரது வீட்டில் வேலை செய்தவர்கள் என தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.