சர்வதேச பங்கு சந்தைகளின் எதிரொலியாக இந்தியாவின் பங்கு சந்தைகள் கொஞ்சம் தடுமாற்றம் அடைந்து சற்று ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. வாரம் முதலிலேயே இப்படி நிலைமை இருப்பதாக முதலீட்டாளர்கள் புலம்பி வருகின்றனர்.
தற்போது சென்செக்ஸ் 113.05 புள்ளிகள் அதிகரித்து, 48,991.59 ஆகவும், இதே நிஃப்டி 36.85 புள்ளிகள் அதிகரித்து, 14,408.75 ஆகவும் காணப்படுகிறது. ரூபாயின் மதிப்பு ரூ.72.95 ரூபாயாக தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.