கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் ஊரளங்கு தளர்வுகள் அறிவித்த பிறகு பள்ளி திறப்பு குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 18-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்பிற்கான வகுப்புகள் வரும் 11-ம் தேதி திறக்கப்படுகிறது. ஒருநாள் 50 சதவீதம் மாணவர்களைக் கொண்டு வகுப்புகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ளதால் கல்விச்சாலைகளை திறக்க ராஜஸ்தான் அரசு தீர்மானித்துளது.