சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைவாசம் முடிந்து கடந்த வாரம் ரிலீஸானார் சசிகலா. ஆனாலும் கரோனா தொற்றின் காரணமாக பெங்களூர் ரிசார்டில் தங்கியிருந்த சசிகலா 8 ஆம் தேதி தமிழகம் வருவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சற்றுமுன் பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சசிகலா.
ரிசார்ட் வாசலிலேயே ஆயிரக்கணக்கான அமமுகவினர் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வேலு நாச்சியார் சின்னம்மா எனவும் அவர்கள் கோசம் எழுப்பினர். ஜெயலிதா போலவே ஒப்பனையில் வந்தார் சசிகலா. தொண்டர்களை நோக்கி இருகைகளையும் கூப்பியவாறு வந்தார் சசிகலா. அவரது வாகனம் தொண்டர்கள் படைகளுக்கு மத்தியில் மெதுவாக ஊர்ந்து வந்தது. சசிகலா அதிமுக கொடியை வாகனத்தில் கட்டக்கூடாது என அதிமுக தரப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் சசிகலாவின் வாகனத்தில் அதிமுக கொடியே கட்டப்பட்டுள்ளது. முன்னதாக சசிகலாவுக்கு ஆரத்தி எடுத்து, வாகனத்தின் முன்பு தேங்காய் உடைத்து தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.