தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துகுவிபு வழக்கில் தண்டனை பெற்று நான்கு ஆண்டுகளுக்கு முபு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் வரும் 27-ம் தேதி விடுதலை ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா நேற்று பெங்களூரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து அறிய டி.டி.வி தினகரன் பெங்களூர் சென்றுள்ளார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், சசிகலா அவசரசி கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கர்நாடக மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகாரளித்துள்ளார்.
விடுதலையாக சில நாள்களே உள்ள நிலையில், அரசியலில் முக்கிய புள்ளியான சசிகலாவுக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலாவை கேரளம் அல்லது புதுச்சேரி மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையத்தில் கோரியுள்ளனர்.