பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையானார்.அதே நேரம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த சசிகலாவிடம் சிறைத்துறை நிர்வாகம் சார்பில் நேரடியாக அதிகாரிகள் சென்று விடுதலை செய்யப் படுவதற்கான சான்றிதழை வழங்கியுள்ளனர்.இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக குணம் அடைந்து உள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 31ஆம் தேதி அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆனால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அதிகரித்தபடி பெங்களூருவில் உள்ள ஒரு வீட்டில் சசிகலா தனியாக இதுவரை வெளிவந்துள்ள இந்த நிலையில் பெங்களூரிலிருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை வருகின்றார்.
அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில்அதிமுக கொடி பொருத்தப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன போது சசிகலா காரில் பொருத்தப்பட்டிருந்த அதிமுக கொடி சர்ச்சையாகி வந்தது பெங்களூருவில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு கார் மூலம் சென்னை புறப்பட சசிகலா தமிழக எல்லைப் பகுதியான அத்தி பள்ளியில் காரில் இருந்தவாறே அவரது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.அதனைத் தொடர்ந்து ஓசூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி ,ஆம்பூர் ,வேலூர், காஞ்சிபுரம் ,ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி ,போரூர் வழியாக வரும் அவர் கிராமத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இல்லத்திற்கு வர இருக்கின்றார் அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மரியாதை செலுத்துகின்றனர் .தொடர்ந்து சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்துக்கு சசிகலா சொல்லியிருக்கின்றார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர் காரில் இருந்தபடியே கட்சியினருக்கு உற்சாக வரவேற்பு செய்து வருகின்றனர்.