உலகத்தை வியக்கச் செய்த பெரும் கணித மேதை ராமானுஜன் தமிழ்நாட்டில் உள்ள ஈரோட்டில் 1887-ஆம் ஆண்டு இதே தேதியில் பிறந்தார். இவருடைய தந்தை கும்பகோணம் சீனிவாசய்யங்கார். தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுஜனின் தந்தையாரும், தந்தை வழிப்பாட்டனாரும் துணிக்கடைகளில் எழுத்தாளராக பணியாற்றி வந்தனர்.
தாய்வழி பாட்டனாரும் ஈரோட்டு முன்சீப் அறமன்றத்தில் அமீனாக வேலைபார்த்தவர். ஆகவே, இவர் எளிய குடும்பத்தில் வறுமையான நிலையில் இருந்தார். எனினும் இவர் சிறு வயதிலேயே கணிதத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளை கண்டுணர்ந்தார்.
எண்களின் பண்புகளை அறிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக்கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மீன்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர் மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.