பிரபல இந்தி நடிகை பிரீத் சிங்குக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டு அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இயக்குனர் அஜய்தேவ்கனின் ‘மே டே’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது. அதில் ரகுல் பிரீத் சிங் நடித்துக் கொண்டு இருந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ரத்துசெய்துவிட்டு பூரண ஓய்வில் இருக்கிறார் ரகுல் பிரீத் சிங். கூடவே என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.