சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களின் 25 வருட காத்திருப்புக்கு விடை கிடைத்துவிட்டது. ஒருவழியாக அரசியலுக்கு வருவதாகச் சொல்லிவிட்டார் ரஜினி. ’’இப்போ இல்லைன்னா எப்பவுமே இல்லை’’ என ரஜினி சொன்ன வார்த்தைகளை டிரெண்டாக்கி அவரது கட்சியின் பெயர், கூட்டத்துக்காக காத்திருக்கிறது பெரும்கூட்டம்.
ரஜினிகாந்த் அண்மையில் தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதியும், ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும் அறிவித்து இருந்தார். ரஜினி இப்போது அண்ணாத்த சூட்டிங்கில் இருந்தாலும் கட்சியைப் பலப்படுத்தும் பணிகள் மக்கள் மன்ற நிர்வாகிகளின் மூலம் மிகத்தீவிரமாக நடந்துவருகிறது. அதிமுக நிறுவனரான எம்.ஜிஆரின் பெயரை போகும் ஊரெல்லாம் சொல்கிறார் கமல். இதனால் ஏற்கனவே கமல் மீது கடுப்பில் இருக்கிறது அதிமுக கூடாரம். இந்நிலையில் ரஜினியும் தன் கட்சியை எம்.ஜி.ஆர் பிறந்தநாளான ஜனவரி 17ம் தேதி அறிவிப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஏற்கனவே கடந்த 2018ல் வானகரத்தில் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப்பல்கலைக்கழக வளாகத்தில் எம்.ஜி.ஆர் சிலை ரஜினி திறந்து வைத்திருந்தார்.
அப்போதே எம்.ஜி.ஆர், ‘எம்.ஜி.ஆரைப் போல் யாரும் ஆகமுடியாது. ஆனால் அவர் கொடுத்த ஏழை, எளிய மக்களுக்கான நல்லாட்சியை என்னால் கொடுக்கமுடியும்.’என்று பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.