அதிமுக ஒருங்கிணைப்பாளரும் மற்றும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் நடிகர் ரஜினியை ரகசியமாக சந்தித்து பேசி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எடப்பாடி பன்னீர்செல்வம் தன்னிச்சையாக பிரச்சாரத்தை துவங்குவதாக அறிவித்து தற்போது பிரச்சாரத்தையும் துவங்கியுள்ளார். இது துணை முதல்வர் மற்றும் பிற நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருந்து ஓபிஎஸ் விலகினாலும் கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்பது அவருக்கு மனவருத்தத்தையும் அளித்துள்ளது. அவர் அதிருப்தியில் இருப்பதால் அவர்பற்றிய விவரங்களும் தற்போது இணையதளங்களில் வதந்திகளாக குவிந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் நடிகர் ரஜினி துவங்க உள்ள கட்சி, சசிகலா விடுதலை ஆகியவை அதிமுகவில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் தற்போது எதிர்பார்க்கப்படுகின்றது.
ரஜினி கட்சி தொடங்கினால் அவர் பின்னால் செல்ல அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் தயாராக உள்ளனர். அவர்கள் ரஜினி தரப்பினருடன் தொடர் பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் ரஜினி கட்சி துவங்குவது குறித்து கேட்டபோது அவருடன் கூட்டணி அமைய அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். இதை அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை இந்த நிலையில் சமீபத்தில் திருப்பதி சென்று இருந்த பன்னீர்செல்வம் அங்கிருந்து ரகசியமாக ஐதராபாத் சென்று ரஜினியை பார்த்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அங்கு படப்பிடிப்பில் இருந்த ரஜினியை சந்தித்து பேசி உள்ளதாகவும் தகவல்கள் உலா வருகிறது. அப்படியே இந்த சந்திப்பு நடந்திருந்தாலும் அது கூட்டணி விஷயமாக தான் இருக்கும் என அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
அதேநேரத்தில் தேர்தல் நேரத்தில் தனக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காவிட்டால் இபிஎஸ் தரப்புக்கு எதிராக பன்னீர்செல்வம் போட்டியிடுவார் என்றும் அந்த நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முக்கியமுடிவுகள் குறித்தும் இருவரும் பேசி இருப்பதாக மற்றொரு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இவை அனைத்தும் பன்னீர்செல்வம் தரப்பினர் மறுத்துள்ளனர்.
பன்னீர்செல்வத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக சிலர் திட்டமிட்டுள்ளதாக அவர் குறித்த வதந்திகளை பரப்பி வருகின்றனர் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தல் களத்தில் செயல்பாடு இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.