தென்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்றுமுதல் நான்குநாள்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவல், ‘’வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் 4 நாள்களுக்கு லேசான பெய்யும்.
அதேநேரம் வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்படும். குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ முதல் 55 கிமீ வேகத்தில் பலத்த காற்றுவீசும். இதனால் இந்தப்பகுதி மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.