தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி நிபுணராக பல்வேறு வங்கிகளில் பணியாற்றியவர் ஆவார். இவர் தமிழகத்தின் நிதியமைச்சராக பொறுப்பேற்ற போது, பலரும் பாராட்டினார்கள். அதேநேரம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து புள்ளி விவரங்களோடு கேள்விகளை தொடர்ந்து கேட்டு பாஜகவிற்கு நெருக்கடியும் கொடுத்துள்ளார்.மேலும் ஜிஎஸ்டி வரி பங்கீடு தொடர்பாக மத்திய அரசை பிடிஆர் கடுமையாக கேள்விகளை எழுப்பி வந்தார்.
இந்நிலையில் அண்மையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக இரண்டு ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியானது. முதல் ஆடியோவில் “உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்,” என்று இருந்தது.
சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜெயரஞ்சன் அந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என போஸ்டர்களும், நிகழ்ச்சி நிரலும் அச்சிடப்பட்டுள்ளது. பிடிஆர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களில் அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் ஜெயரஞ்சன் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாம்.