கோவை கொடிசியா மைதானத்தில் பா.ஜ.க பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். மோடி பேசுகையில், “தமிழக சட்டசபை தேர்தல் மூலமாக புதிய அரசைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. மத்தியில் பா.ஜ.க அரசும், தமிழகத்தில் அ.தி.மு.க. அரசும் சேர்ந்து கூட்டுறவு கூட்டாட்சி என்ற தத்துவத்துக்கு உதாரணமாக செயல்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் பயன் பெறுவதற்காக நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். அதனால் தமிழகத்துக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்திருக்கின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும், அப்பாவி மக்களை ஏமாற்றுவோரையும் கொடுமைப்படுத்துவோரையுமே திமுக கட்சியில் வைத்திருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டவிரோதிகள் தாங்களே ஆட்சிக்கு வந்ததாக நினைப்பர். சட்டவிரோதிகள் மீண்டும் தலை துாக்குவார்கள். இதனால் தமிழகப் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்” என்றார்