இந்திய அணி கேப்டன் விராட் கோலி மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த ஜனவரி 11-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தையின் போட்டோவை அனுஷ்கா சர்மா தனது ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் வதிவேற்றம் செய்தார். அதில், “நாங்கள் இருவரும் இணைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தோம். புதிதாக வந்த குழந்தை வாமிகா எங்களை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளார். கண்ணீர், சிரிப்பு, கவலை, மகிழ்ச்சி என பல்வேறு உணர்ச்சிகள் அவ்வப்போது வந்து போகின்றன. துாக்கம் மட்டும் வரவில்லை. ரசிகர்களின் வாழ்த்துக்கும், பிரார்த்தனைக்கு நன்றி” என இஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் “எனது ஒட்டுமொத்த உலகமும் இந்த ஒரு போட்டோவில் அடங்கியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CKvOEpOpEG_/?utm_source=ig_embed