நாகர்கோவில்: பறக்கை அளிச்சன்காட்டுவிளை அருள்மிகு தேவி ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றனர்.
மகா கணபதி பூஜையுடன் தொடங்கிய இந்நிகழ்வில் பறக்கை அருள்மிகு ஸ்ரீ மதுசூதனப்பெருமாள் கோயில் சன்னதியில் இருந்து 108 குடங்களில் புனித நீர் எடுத்து வந்தனர். இரண்டாம் கால பிரதிஷ்டை பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக நிகழ்வில் ஜூவ கலசங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு விமான கும்பாபிசேகம், முகூர்த்திக்கு கும்பாபிஷேகம், பிரசன்ன பூஜை ஆகியவற்றைத் தொடர்ந்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பிரசன்ன பூஜையும், மஹேஸ்வர பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக நிகழ்வில் தமிழக அரசின் புதுடில்லிப் பிரதிநிதி தளவாய்சுந்தரம், ஆஸ்டின் எம்.எல்.ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விஷ்வ ஹிந்த் பரிஷித் தென் தமிழகத் தலைவர் பெரி.குழைக்காதர், அகிலபாரத இந்துமகா சபா மாநிலத் தலைவர் தா.பாலசுப்பிரமணியம், மீனாதேவ், முத்துராமன் உள்பட பலரும் கலந்துகொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாகுழுவினரும், ஊர்பொதுமக்களும் சேர்ந்து செய்திருந்தனர்