2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஓ பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் தாமரை சின்னத்தில் நிற்பார் என மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்
அதிமுக- பாஜக கூட்டணி உடையாமல் இருக்க சிறிய பேஸ்ட் போட்டு ஒட்டப்பட்டுள்ளது. தேர்தலுக்குள் அந்த பேஸ்ட் நழுவில் ஒட்டிய இடம் மேலும் கிழியாமல் இருந்தால் நல்லது. கூட்டணி குறித்து பாஜக மேலிடத்தில்தான் பேசுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்லியிருந்தார், தற்போது அதை அமித்ஷாவிடம் உறுதிப்படுத்திவிட்டும் வந்ததாலேயே எடப்பாடி வென்றுவிட்டார் என்றில்லை.
அண்ணாமலை குறித்து புகார் கூற சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு ஒருங்கிணைந்த அதிமுக, 2024 தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்தெல்லாம் அமித்ஷா பேசியது பெரும் அதிர்ச்சிதான். பாஜக, பாமக, ஆகியவற்றுக்கு தலா 7 இடங்கள், தமாக, கிருஷ்ணசாமி கட்சி, ஏசிஎஸ் கட்சிக்கு தலா 1 இடங்கள் என மொத்தம் 17 இடங்கள் உள்ளது. மீதமுள்ள 3 இடங்களை ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு உள்ஒதுக்கீடாக பாஜக தந்தாலும் தரும். அப்படி ஓபிஎஸ் மகன்
ரவீந்திரநாத்துக்கு பாஜக சார்பில் எம்பி சீட் கொடுக்கும் போது கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பார். அவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காதபட்சத்தில் பாஜகவின் தாமரை சின்னத்தில் கூட நிற்பார். இதற்குதான் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் தேனிக்கு பிரச்சாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி செல்ல மாட்டார். அதிமுக – பாஜக கூட்டணி என்னதான் செலவு செய்து தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்களுடைய வெற்றி எண்ணிக்கை குறைவாக இருக்கும், இல்லாவிட்டால் பூஜ்யமாக இருக்கும்.