தழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு உள்துதை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்தார். இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகோரை சந்தித்து பல்வேறு கோரிக்கைககை முன்வைத்துள்ளேன். தமிழகத்தில் செய்து முடிக்கப்பட்ட பணிகளை திறந்துவைக்க அழைப்பு விடுத்தேன்.
புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கைகளை ஏற்று பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறியுள்ளார். உயர்கல்வியில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான கோரிக்கைகளுக்காக மட்டுமே நான் இங்கு வந்துள்ளேன். அரசியல் ரீதியாக வேறு எதுவும் பேசவில்லை. என்னை பொறுத்தவரையில் தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அ.தி.மு.க ஆட்சி அமைக்கும். சசிகலா அதிமுக.,வில் இல்லை. சசிகலா விடுதலையால் கட்சிக்குள் எந்த மாற்றமும் ஏற்படாது. அவருடன் இருந்தவர்கள் பலர் அ.தி.மு.க-வில் சேர்ந்து விட்டனர். இன்னும் சிலர் மட்டும் அவருடன் உள்ளனர். சசிகலாவை கட்சியில் இணைக்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை” என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.