தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வரும் தேர்தலில் எங்களுக்கான சீட்டுகளை திமுகவிடம் இருந்து கேட்டுப் பெறுவோம். சசிகலா வருகையால் அரசியலில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. சசிகலா அதிமுக-வில் இணைய வேண்டுமென்று பாஜக வலியுறுத்துவதாக தகவல்கள் வருகின்றன. தங்கள் கட்சியில் யாரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மற்றொரு கட்சி முடிவு செய்யும் நிலையில் தான் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக உள்ளது. மூன்றாவது அணி அமைவது தமிழகத்துக்கு நல்லதல்ல.
