புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸை தங்கள் கூட்டணிக்குள் வைத்துக்கொள்ள தொடர்ந்து பாஜக அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறுகையில், ‘பாஜகவுக்கு அழுத்தம் தரவேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே கடந்த பாராளுமன்றத் தொகுதியில் சேர்ந்துதான் தேர்தலை சந்தித்தோம்.
கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி புதுவையை 100 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துப் போய்விட்டது.சுயநல நோக்கமே இல்லாமல் இந்த கூட்டணி வென்றால் அனைத்துவிதமான மக்களுக்கும் நல்லது என்பதாலேயே பேசிவருகிறோம். மத்திய அரசின் உதவி இருந்தால் யூனியன் பிரதேசமான புதுவை நன்கு வளரும். அது என்.ஆர்.காங்கிரஸின் ரங்கசாமிக் கும் நன்கு தெரியும். அதை மனதில் வைத்து கூட்டணி தொடர்பாக நல்ல முடிவெடுப்பார் என நம்புகிறோம். தேர்தலை சந்திக்க பாஜக ஆயுத்தமாக இருக்கிறது. ‘என்றார்.