தற்போது நிலவும் சூழலில் இந்தியாவுடன் பேச்சுவார்தை நடத்துவதற்கு வாய்பில்லை என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவி வரும் சூழலில் இந்தியாவுடன் துதரக ரீதியிலோஅல்லது தனிப்பட்ட முறையிலான பேச்சுவார்த்தையோ நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை. எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்துவதற்கான சூழல் இது அல்ல், என குரேஷி கூறியதாக பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் (DAWN) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேச்சுவார்த்தையும் – தீவிரவாதமும் ஒன்றாக நடைபெற முடியாது என்ற நிலைபாட்டில் இந்தியா தொடர்ந்து நிலைத்து நிற்கிறது. மேலும் இந்தியா மீது பல தாக்குதல்களை தொடுத்த தீவிரவாத குழுக்கள் மீது நம்பும்படியான நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியில் ட்ரோன் மூலம் வீசப்பட்ட கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஊடுருவல்காரர்கள் சிலரும் கொல்லப்பட்ட நிலையில் பாகிஸ்தான் இப்படி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.