கடந்த 7 ஆம் தேதி நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஒரு மாணவி போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் சமர்பித்தது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவத்துறை அளித்த புகாரை அடுத்து சென்னை பெரியமேடு காவல்துறையினர் குறிப்பிட்ட மாணவி மற்றும் அவரது தந்தையான பல் மருத்துவர் ஆகிய இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தனர்.
குறிப்பிட்ட தேதியில் இருவரும் ஆஜராகாததால் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இரு முறையும் ஆஜராகாததால் அவர்கள் இருவரையும் கைது செய்ய காவல்துறை சார்பாக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீட் தேர்வில் ஆள்மாறட்டம் செய்த ஒரு வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.