9 கோடி விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி உதவித்தொகையை பிரதமர் மோடி நாளை வழங்குகிறார். நாளை மறைந்த பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி பிரதம மந்திரி கிஸான் சம்மன் நிதி வழங்கும் திட்டத்தைமோடி தொடங்கிவைத்து மோடி வழங்குகிறார். தொடர்ந்து விவசாயிகளுடன் காணொலி மூலம் உரையாடவும் இருக்கிறார்.
கடந்த ஆண்டு முதல், 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறுவிவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 6000 வழங்கும் விவசாயிகள் நலநிதித்திட்டத்தை பாஜக அரசு அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. தொடர்ந்து இந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, அனைத்து விவசாயிகளும் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.
இதில் ஏப்ரல்_ஜூன் முதல்தவணையும், ஆகஸ்ட்_நவம்பர் வரை இரண்டாவது தவணையும், டிசம்பர்_மார்ச் வரை மூன்றாவது தவணையும் நேரடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. 2020_2021 நிதியாண்டின் மூன்றாவது தவணை இந்தத் திட்டத்தில் பதிவுசெய்து இருந்த 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா 2000 ரூபாய் வீதம், 18 ஆயிரம் கோடி ரூபாய் நாளை வழங்கப்பட உள்ளது.