தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்கள். அப்போது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை மெல்ல மெல்ல தமிழகஅரசு அறிவித்து வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் கடந்த மாதத்தில் இருந்து 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படத் தொடங்கின. இருந்தாலும் திரையரங்குகளில் மக்களின் கூட்டம் அதிக அளவு காணப்படவில்லை. பெரிய நடிகர்களின் படங்களும் எதுவும் வெளியாகாத நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் 100% இருக்கைக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். நடிகர் விஜயும் இதே கோரிக்கையை முன்வைத்தார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தற்போது அனுமதி அளித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் எச்சரிக்கை விடுத்து பதிவு செய்துள்ளார் மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும். இதுபோன்ற இடங்களில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்கள். அப்போது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளானது.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை மெல்ல மெல்ல தமிழகஅரசு அறிவித்து வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் கடந்த மாதத்தில் இருந்து 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படத் தொடங்கின. இருந்தாலும் திரையரங்குகளில் மக்களின் கூட்டம் அதிக அளவு காணப்படவில்லை. பெரிய நடிகர்களின் படங்களும் எதுவும் வெளியாகாத நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் 100% இருக்கைக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். நடிகர் விஜயும் இதே கோரிக்கையை முன்வைத்தார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தற்போது அனுமதி அளித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பொது சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் எச்சரிக்கை விடுத்து பதிவு செய்துள்ளார் மூடப்பட்ட அறைகளில் சமூக இடைவெளி இல்லாமல் இருப்பது கொரோனாவை அதிவேகமாக பரப்பும். இதுபோன்ற இடங்களில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.