பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ராண்டி என்ற 35 வயதான நபர் பெற்றோரை இழந்தவர். அவர்களது இறப்புக்கு பின்பு அந்த சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்துக்கே சென்றவர் தன் வீட்டுப்பக்கத்தில் இருக்கும் ஒரு பாறையின் இடையில் உள்ள இடைவெளியில் சென்று தனது வாழ்க்கையை தொடங்கி உள்ளார். பெற்றோரை இழந்த நிலையில், திருமணமும் செய்துகொள்ளாத அவர் மற்றவர்கள் யாருடனும் பேச விருப்பம் இல்லாமல் அந்த பாறைக்கு அடியில் தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.
தனிமையில் மன விரக்தியில் பாறைகளின் இடைவெளிக்குள் தங்கி வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த ஊர்மக்கள் அவரைக் கண்டுபிடித்து உணவுகொடுத்து வருகின்றனர். தொடர்ந்து அவரிடம் எல்லாரையும் போலும் பொதுஇடத்தில் வாழ்வதற்கு அமைப்பு விடுத்துள்ளார் அதற்கு ராண்டி தனக்கு வெளியுலகுக்கு வந்து வாழ விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.