மேற்கு வங்க மாநிலத்தில் அரசியல் சூடு பிடித்திருக்கிறது. தற்போது முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, மீண்டும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் இன்று நந்திகிராமுக்கு வந்த மம்தா பானர்ஜி, சண்டிதேவி கோயிலில் வழிபாடு செய்தார். அம்மனுக்கு பட்டுப்படவை வைத்து வழிபட்டார். தொடர்ந்து கோயிலில் மணி அடித்து வழிபட்டார்.
ஆலயத்தில் இருந்து வெளியே வந்தவர் திடீரென சாலையோர டீக்கடைக்குள் நுழைந்தார். அங்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் அவரே டீ போட்டு, கடையில் நின்றவர்களுக்கு வினியோகிக்கவும் செய்தார். இது அப்பகுதி மக்களால் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது.