அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட். கடந்த 4 மாதங்களில் 4 பில்லியன் அமெரிக்க டாலரை 354 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அதாவது இந்திய மதிப்பில் சுமார் 29 ஆயிரத்து 437 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக வலம் வந்து கொண்டிருப்பதுதான் அமேசான் நிறுவனம். அதின் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து செய்துகொண்டனர். அப்போது அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவி மெக்கன்சி க்கு ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கியுள்ளார்.இதன் அப்போதைய மதிப்பு சுமார் 2 லட்சத்து 94 ஆயிரம் கோடியாகும்.
இதன்மூலம் தற்போது மெக்கன்சியின் சொத்து மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது .இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஆகும். இதன் மூலம் அவர் உலகில் 18வது பணக்காரராகவும் உலக அளவில் பெண்களில் மூன்றாவது பணக்காரராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது சொத்து மதிப்பு உயர்ந்து வரும் அதே நேரத்தில் அவர் நன்கொடைகளையும் தான தர்மங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
ஏற்கனவே கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நாளில் இருந்து கடந்த ஜூலை மாதத்துக்குள் 1.7பில்லியன் அமெரிக்க டாலரை அதாவது 12500 கோடி ரூபாயை பல்வேறு அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிலையில் அடுத்த 4 மாதங்களில் மீண்டும் 4 பில்லியன் அமெரிக்க டாலரை இந்திய மதிப்பில் சுமார் 29 ஆயிரத்து 437 கோடியை 384 தொண்டு நிறுவனங்களுக்கும் நன்கொடையாக வழங்கயுள்ளார். புற்று நோயுடன் போராடும் அமெரிக்கர்களுக்கு உதவ விரும்புவதாகவும்,அடுத்தவர்களுக் கு உதவுவது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதற்காகவும், இந்த நன்கொடைகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட். கடந்த 4 மாதங்களில் 4 பில்லியன் அமெரிக்க டாலரை 354 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அதாவது இந்திய மதிப்பில் சுமார் 29 ஆயிரத்து 437 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக வலம் வந்து கொண்டிருப்பதுதான் அமேசான் நிறுவனம். அதின் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து செய்துகொண்டனர். அப்போது அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவி மெக்கன்சி க்கு ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கியுள்ளார்.இதன் அப்போதைய மதிப்பு சுமார் 2 லட்சத்து 94 ஆயிரம் கோடியாகும்.
இதன்மூலம் தற்போது மெக்கன்சியின் சொத்து மதிப்பு 60 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது .இந்திய மதிப்பில் சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஆகும். இதன் மூலம் அவர் உலகில் 18வது பணக்காரராகவும் உலக அளவில் பெண்களில் மூன்றாவது பணக்காரராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது சொத்து மதிப்பு உயர்ந்து வரும் அதே நேரத்தில் அவர் நன்கொடைகளையும் தான தர்மங்களையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
ஏற்கனவே கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நாளில் இருந்து கடந்த ஜூலை மாதத்துக்குள் 1.7பில்லியன் அமெரிக்க டாலரை அதாவது 12500 கோடி ரூபாயை பல்வேறு அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நிலையில் அடுத்த 4 மாதங்களில் மீண்டும் 4 பில்லியன் அமெரிக்க டாலரை இந்திய மதிப்பில் சுமார் 29 ஆயிரத்து 437 கோடியை 384 தொண்டு நிறுவனங்களுக்கும் நன்கொடையாக வழங்கயுள்ளார். புற்று நோயுடன் போராடும் அமெரிக்கர்களுக்கு உதவ விரும்புவதாகவும்,அடுத்தவர்களுக் கு உதவுவது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதற்காகவும், இந்த நன்கொடைகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.