கடந்தவாரம் திடீரென கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருந்தது. இப்போது மேலும் 50 ரூபாய் கூட்டப்பட்டு ஒரு கேஸ் சிலிண்டர் 710 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
முன்பெல்லாம் விறகு அடுப்பில் தான் சமையல் செய்யும் சூழல் இருந்தது. முதலில் வசதிபடைத்தோர் வீட்டில் சமையல் எரிவாயு உருளை வைத்தனர். தொடர்ந்து மத்திய அரசே அனைவருக்கும் சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயில் விலை, அந்நிய செலவானிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சமையல் எரிவாயு உருளை விலையை அந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.
சமையல் எரிவாயுவை பொறுத்தவரை வீட்டுக்கு 12 சிலிண்டர்கள் ஆண்டுக்கு கொடுக்கப்படுகிறது. அதற்குமேல் சிலிண்டர் தேவைப்பட்டால் கூடுதல்விலை கொடுத்துத்தான் வாங்கவேண்டும். ஏற்கனவே கடந்த 1ஆம் தேதி சிலிண்டர்விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டதாக இண்டேன் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்போது கேஸ் சிலிண்டர் 710 ரூபாய்க்கு விற்கிறது. நிகழாண்டில் இதுவரை 5 முறை கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.