இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதசேம் 1950ல் இந்நாளில் உருவாக்கப்பட்டது. இது முந்தைய ஐக்கிய மாகாணங்களின் கீழ் வந்த பகுதிகளை உள்ளடக்கியது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் உருவான நாளான இன்று மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர், கடந்த சில ஆண்டுகளில் அதன் முன்னேற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநில மக்கள் பல்வேறு துறைகளில் முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதாகவும், நாட்டின் வளர்ச்சியில் மதிப்புமிக்க பங்களிப்பை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.