தமிழகத்தில் தேர்தல் களம் மிகவும் விறு,விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரமே இருக்கும் நிலையில் பிரபலங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் இப்போதே சூடுபிடிக்கத் துவங்கிவிட்டன.
அந்தவகையில் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவருக்கு எதிராக அண்ணாமலையை நிறுத்த பாஜக வியூகம் வகுக்கிறது. ஆனால் அண்ணாமலையோ கிணத்துக்கிடவு தொகுதியைத் தான் விரும்பினாராம். சேப்பாக்கமோ, திருவல்லிக்கேணியோ உதயநிதி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நடிகை குஷ்பு களம் காண்பார் என்கிறார்கள். ஒருவேளை உதயநிதி ஆயிரம் விளக்குத் தொகுதியைக் குறிவைத்தால் காய்த்ரி ரகுராம் களம்காண்பார்.
இதேபோல் அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகை கவுதமி, ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு அதிமுக 5 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் மற்றும் சுயேட்சைகள் தலா இருமுறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருமுறையும் ஜெயித்திருக்கும் இந்தத் தொகுதி தற்போது திமுக வசம் இருக்கிறது. இந்நிலையில் இந்த தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளராக நடிகை கவுதமியை பாஜக அறிவித்தது. அவரும் தொகுதிக்குள் தங்கி இருந்தே பணிகளை செய்துவருகிறார். அதிமுகவோடு கூட்டணி பேசி இன்னும் தொகுதிகளையே முடிவு செய்யாத சூழலில் தொகுதி முழுவதும் பாஜகவினர் தாமரை சின்னங்களை இப்போதே வரைந்து வைத்துள்ளனர். இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடிகை கவுதமி களம் இறக்கப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.