கேரளத்தில் மூன்றுகட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியானது அசுர பலத்துடன் அதிக இடங்களில் வெற்றிபெற்றது. சபரிமலை விவகாரம் தொடங்கி, சுவப்ணாவின் தங்கக்கடத்தில் விவகாரம் வரை பல்வேறு பிரச்னைகள் இருந்தபோதும் கேரளத்தில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணியே அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இதில் மாநகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துகள், கிராம பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய இடங்களில் சி.பி.எம் அதிக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நகராட்சிகளில் காங்கிரஸ் கட்சியே அதகளம் செய்துள்ளது. கேரளத்தில் மொத்தமுள்ள 86 நகராட்சிகளில் பாஜக 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மார்க்சிஸ்ட் கூட்டணி 35 இடங்களில் வெற்றிபெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. சி.பி.எம், காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் 4 நகராட்சிகளைக் கைப்பற்றியுள்ளன.