சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் உள்ள வட சென்னை பகுதிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு அதற்கான வேலைளை தொடங்கி உள்ளது. அந்த வகையில் கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலைப் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன சந்தை, ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புழல், மேட்டுப்பாளையம், சீனிவாசன் தெருவில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தை புனரமைப்பது போன்ற பணிகள் தொடங்கப்பட உள்ளன.
அதேபோல் புழல், மகாலட்சுமி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய பள்ளி வளாகம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைப்பது, எண்ணூரில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தை மற்றும் சமுதாயக்கூடத்தை ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிப்பது, வடசென்னை மக்களுக்குப் பயன்படும் வகையில் திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை மேம்படுத்துவது போன்ற பணிகளும் தொடங்க இருக்கின்றன.
வடசென்னை மக்களுக்குப் பயன்படும் வகையில் பார்வதி நகரிலிருந்து காசிமேடு வரை சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை ரூ.30 கோடி செலவில் அழகுபடுத்தப்படும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளில், சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் 16 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 இடங்களிலும் வெகு விரைவில் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் துவக்க இருக்கிறோம்.” என்றார்.