அச்சுறுத்தி வருகின்றது. அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு மெல்லமெல்ல தளர்வுகள் ஏற்படத் தொடங்கின.
இந்நிலையில் இங்கிலாந்தில் புதிதாக உருவாகியுள்ள கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு வந்தவருக்கு கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்வகையில் கர்நாடகாவில் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என அந்த மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார் .மேலும் ஜனவரி இரண்டாம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்குமென்றும், தேவையின்றி மக்கள் வெளியே வரக்கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்டு வந்த தமிழக அரசு பேருந்துகள் இரவு நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ,சேலம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது