தமிழக அரசியல்வாதிகளில் தேர்தலுக்கு முதன்முதலில் பிரச்சாரத்தை துவங்கிய நபராக கவனம் ஈர்க்கிறார் கமல். கூட்டணிகளே உறுதியாகாத நிலையில் தென்மாவட்டங்களில் தீவிர பரப்புரை செய்துவரும் கமல் ஆளும்கட்சியை கடுமையாக விமர்சித்துவருகிறார்.
தனது பிரச்சாரத்தின் ஊடே லஞ்ச ஒழிப்பு சோதனையில் அதிக அளவு அரசு அதிகாரிகள் சிக்குவதை வைத்து அரசை கடுமையாக விமர்சித்தார் கமல். இதனிடையே பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடம் செய்தியாளர்கள் இதைக் கேள்வியாகக் கேட்டனர். ‘லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்தும், அரசின் நடவடிக்கை குறித்தும் பேச கமலுக்கு என்ன தெரியும்? எங்குமே தவறு நடக்கக்கூடாது என்பதால்தான் அரசு, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்துகிறது. பிக்பாஸ் நடத்துபவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்டவர் ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறார்.
கமல் கூறியதை பெரிதாக எடுக்கவேண்டியது இல்லை. எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி கமல் வாக்குவாங்க முயல்கிறார். எம்.ஜிஆர் பெயரைச் சொல்ல அதிமுகவுக்கு மட்டுமே உரிமை உள்ளது.’என்றார்.