வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்கள் மிக அருகில் வருவதால் தோன்றும் கிருஸ்துமஸ் நட்சத்திரம் வரும் 21 ஆம் தேதி வானில் தோன்றுகிறது
சூரிய குடும்பத்தில் உள்ள இரண்டு மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி ஆகியவை நெருங்கி ஒரே கோட்டில் வந்து நாம் பார்ப்பதற்கு ஒரே கோள் போல மிகப் பிரகாசமாக காட்சியளிக்கும். வரும் 21 ஆம் தேதி மாலை 6 மணி முதல் இந்த நிகழ்வு வானில் நிகழ உள்ளது. இதை நாம் அனைவரும் வெறும் கண்களால் பார்க்கலாம் எந்த பாதிப்பும் ஏற்படாது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த இரண்டு கோள்களும் பூமியிலிருந்து பார்ப்பதற்கு அருகருகே இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் அவற்றுக்கு இடையேயான இடைவெளி பல நூற்றுக்கணக்கான மில்லியன் மைல்கள் இருக்கும் என அமெரிக்க வின்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு வியாழனும் சனியும் இந்த அளவுக்கு அருகருகே வானத்தில் வந்தது சுமார் 400 வருடங்களுக்கு முன்பு தான் என்றும் இனி இது போன்ற ஒரு நிகழ்வு இனி 2080 ஆம் ஆண்டு வாக்கில் தான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இயேசு கிருஸ்து அவதரித்த போது வானில் தோன்றிய வால் நடசத்திரம் போல் இது இருப்பதால் இதற்கு ”கிருஸ்துவம் நட்சத்திரம்” என்ற பெயரிலும் இந்த நிகழ்வு பரவலாக அழைக்கப்படுகிறது.
வியாழன் சனி ஆகிய இந்த இரண்டு கோள்களும் ஒரே நேர்கோட்டில் அருகருகே வருவது போன்ற நிகழ்வு மற்ற கோள்களுக்கு இடையேயும் அவ்வப்போது நடைபெறுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களும், செவ்வாய் மற்றும் சனி கோள்களுக்கு இடையேயும் ஒருங்கமைவு ஒரே மாதத்தில் நடைபெற்றது. ஆனால் வியாழன் மற்றும் சனி ஆகிய இந்த இரண்டு கோள்களும் அருகருகே ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வு மிக அரிதாக நடைபெறுக் கூடியது என்பதால் உலகம் முழுவது உள்ள வானியில் ஆராய்சியாளர்கள் மிக ஆவலுடன் இதை காண காத்து இருக்கின்றனர்.
மிஸ் பண்ணாம நீங்களும் பார்த்திடுங்க…